Posts

Showing posts from March, 2015

‘அம்பேத்கர் – இன்றைய உடனடித் தேவை’ எழுத்தாளர்: அருந்ததி ராய்

Image
‘அம்பேத்கர் – இன்றைய உடனடித் தேவை’ விவரங்கள் எழுத்தாளர்:  அருந்ததி ராய் தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  தலித் முரசு - செப்டம்பர் 2012   வெளியிடப்பட்டது: 05 ஜூன் 2014 பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் முதன்மையான, புகழ்பெற்ற நூல் "ஜாதியை அழித்தொழிக்கும் வழி' (Annihilation of Caste) ஆகும். இதன் முக்கியத்துவம் கருதியே இந்நூலை "தலித் முரசு' சிறப்பிதழாக 2007 இல் (11,000 படிகள்) வெளியிட்டது. அதற்குப் பிறகு நூல் வடிவில் இரண்டாம் பதிப்பாக 2010 இல் 3,000 படிகள் வெளியிட்டோம். தற்பொழுது 2014 இல் மீண்டும் 3,000 படிகள் வெளியிட்டுள்ளோம். ஆக, ஆறு ஆண்டுகளில் 17 ஆயிரம் படிகள் வெளியிட்டும் தமிழகத்தில் இதுவரை இந்நூல் குறித்து எவ்வித விவாதமும் – புரட்சி மற்றும் முற்போக்காளர்களின் கள்ள மவுனத்தால் – திட்டமிட்டே முன்னெடுக்கப்படவில்லை. வணிக ஏடுகளில் ஒரு பக்க அளவில் நூல் மதிப்புரைகூட வந்ததில்லை. இடதுசாரி ஏடுகளும் இதற்கு விதிவிலக்கல்ல!  தற்பொழுது அம்பேத்கரின் இந்நூல் புகழ்பெற்ற எழுத்தாளர் அருந்ததிராயின் 180 பக்க முன்னுரையுடன் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. அருந்ததிர

புத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா? - III

புத்தர் தமது சங்கத்தில் பெண்கள் இணைவதை வரவேற்றாரா? - III விவரங்கள் எழுத்தாளர்:  அம்பேத்கர் தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  ஆகஸ்ட்10   வெளியிடப்பட்டது: 14 அக்டோபர் 2010 இனி, இப்பிரச்சினையை புத்தரின் பார்வையிலிருந்து பரிசீலனை செய்வோம். அத்தகைய ஒரு பதிலை அளிப்பது, புத்தருக்கு இயற்கையானதாக இருந்திருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில், பெண்களின் மீதான புத்தரின் நடத்தைப் போக்கின் மீது சார்ந்திருக்க வேண்டும். ஆனந்தாவுக்கு அவர் வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளதன்படி, புத்தர் பெண்களை சந்திப்பதைத் தவிர்த்திருக்கிறாரா? இது தொடர்பான விவரங்கள் (உண்மைகள்) எவை? இரு எடுத்துக்காட்டுகள் உடனே நம் மனதில் படுகின்றன. ஒன்று விசாகம் பற்றியது. அந்த அம்மையார் புத்தரின் எண்பது முக்கிய சீடர்களில் ஒருவர். "தானம் வழங்கும் தலைவி' என்பது அவருக்கு இடப்பட்ட பெயர். புத்தரின் அறிவுரையை கேட்பதற்கு விசாகம் ஒரு முறை செல்லவில்லையா? அவருடைய மடத்திற்குள் அந்த அம்மையார் நுழையவில்லையா? பெண்களின்பால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆனந்தாவுக்கு ஆணையிட்டது போல, விசாகத்தின்பால் புத்தர் நடந்து கொண்டாரா? அந்த

பிளாட்டோ

பிளாட்டோ விவரங்கள் எழுத்தாளர்:  கமலப்பிள்ளை தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  டிசம்பர்08   வெளியிடப்பட்டது: 12 மே 2010 தத்துவம், கலை இலக்கியம், வீரம் ஆகியவற்றின் விளை நிலமாக இருந்தது கிரேக்கம் என்பதை நாம் அறிவோம். அம்மண்ணிலே தோன்றிய மாபெரும் அறிஞர்களில் ஒருவர் தான் பிளாட்டோ. இவர் சாக்ரட்டீசின் மாணவராவார். பிளாட்டோவின் இயற்பெயர் அரிஸ்டோக்கிளீஸ், அவர் எழுதுவதற்காக ஒரு புனைப்பெயரை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பி "பிளாட்டோ' என வைத்துக் கொண்டார். அனேகமாக புனைப்பெயரை வைத்துக் கொண்டு எழுதிய உலகின் முதல் எழுத்தாளர் அவராகத்தான் இருக்கும். "பிளாட்டோ' என்றால் பரந்த, விரிந்த என்று பொருள்படும் இச்சொல்லில் இருந்து தான் ஆங்கிலச் சொல்லான Flat வந்தது. பிளாட்டோவின் சொந்த ஊர் ஏதென்ஸ். செல்வசெழிப்புமிக்க குடும்பத்தில் இவர் பிறந்திருந்தாலும் எளிமையையே விரும்பியவர். இவரின் தந்தை அரிஸ்டோன், தாய் பெரிக்டியோனி. இவர்களுக்குப் பிறந்த நான்கு குழந்தைகளில் கடைசிப் பிள்ளைதான் பிளாட்டோ. கிரேகத்தின் வழக்கப்படி இராணுவத்தில் சில ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, தனது இருபதாவது வயதில் ச

சமூக ஏற்பாடுகள் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்

சமூக ஏற்பாடுகள் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் விவரங்கள் எழுத்தாளர்:  அம்பேத்கர் தாய்ப் பிரிவு:  தலித் முரசு பிரிவு:  ஏப்ரல்10   வெளியிடப்பட்டது: 09 ஜூன் 2010 நாம் தற்பொழுது அரசியல் மறு சீரமைப்பு குறித்து அக்கறை கொண்டிருக்கவில்லை என்பதால், பிரெஞ்சு அவை தனது தேசத்தில் சமூக மற்றும் மத மறுசீரமைப்பிற்கு என்ன செய்தது என்பதை பார்ப்போம். பிரெஞ்சு தேசிய அவை வெளியிட்ட மூன்று முக்கிய அறிவிப்புகளின் மூலம், இந்த செயல் தளங்களில் அது என்ன மாதிரியான கொள்கையைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். முதல் அறிவிப்பு 17 சூன் 1789 இல் வெளியிடப்பட்டது. இது, பிரான்சில் உள்ள வகுப்பு அமைப்புகளைப் பற்றியது. முன்பே குறிப்பிட்டிருந்தபடி, பிரெஞ்சு சமூகம் வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பு, இந்த மூன்று வகுப்புகளையும் ஒழித்து அவற்றை ஒன்றாக்கியது. மேலும், அரசியல் அவையில் இந்த மூன்று வகுப்பினருக்கும் தனித்தனியே ஒதுக்கப்பட்டிருந்த இடங்களை அது ஒழித்தது. இரண்டாவது அறிவிப்பு, மத குருக்களைப் பற்றியது. பழங்கால நடைமுறையின்படி, இந்த மத குருக்களை நியமிப்பதும் நீக்குவதும் தேசத

வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு எழுத்தாளர்: அப்பணசாமி

வெண்மணி முதல் கயர்லாஞ்சி வரை: தலித்துகளுக்கு எதிரான வன்முறையின் வரலாறு விவரங்கள் எழுத்தாளர்:  அப்பணசாமி தாய்ப் பிரிவு:  புதுவிசை பிரிவு:  ஜனவரி10   வெளியிடப்பட்டது: 17 மார்ச் 2010 2006 செப்டம்பர் 29 அன்று கயர்லாஞ்சில் நிகழ்த்தப்பட்ட தலித் படு கொலைகள் குறித்த முழுமையான தகவல்களைத் திரட்டி, அதன் அடிப்படையிலான ஒரு சமூகவியல் ஆய்விற்கு தற்போதைய நிலைமைகளை உட்படுத்தும் வகையில்,நாட்டின் முக்கிய தலித் செயல் பாட்டாளர்களில் ஒருவரான ஆனந்த் டெல்டும்டே எழுதிய புத்தகம் கயர்லாஞ்சி: எ ஸ்டிரேஞ் அண்ட் பிட்டர் கிராப். (khairlanji: A Strange and Bitter Crop, Anand Teltumde, navayana publising, NewDelhi. 2008). மகாராஷ்டிரா மாநிலம், பண்டாரா மாவட்டம், மொஹாடி தாலுகாவிலுள்ள குக்கிராமம் கயர்லாஞ்சி.  பையாலால் போட்மாங்கே என்ற தலித் குடும்பத்தினர் மீது அக்கிராமமே வன்மம் கொண்டு பலி தீர்த்த வரலாற்றுப் போக்குகளையும், சமூகப்படிநிலைகளின் வன்மங்களை யும், முக்கிய அரசியல் கட்சிகள் மட்டுமல் லாமல், அரசு (காவல்துறை), சட்டம் (நீதி மன்றம்),  ஊடகம் ஆகிய அரசமைப்புக ளும் அதற்கு எவ்வாறு துணை போயின, இதுகுறித்த தகவல்கள

இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் எழுத்தாளர்: அ.ஜெகநாதன்

Image
இரட்டை வாக்குரிமையும் தனித்தொகுதி முறையும் விவரங்கள் எழுத்தாளர்:  அ.ஜெகநாதன் தாய்ப் பிரிவு:  புதுவிசை பிரிவு:  ஜனவரி06   வெளியிடப்பட்டது: 20 ஜனவரி 2006 (பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் உள்ள அம்பேத்கர் ஆய்வு மையம் 2005 ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் நடத்திய கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் திருத்திய வடிவம்) “எங்களுடைய எஜமானர்களாக இருப்பது உங்களுடைய நலன்களுக்கு உகந்ததாக இருக்கக் கூடும். ஆனால் உங்களுடைய அடிமைகளாக இருப்பது எங்களுக்கு எவ்வாறு ஏற்புடையதாக இருக்கும்?” -துசிடிடெஸ் ‘இரட்டை வாக்குரிமை தலித்துகளுக்கு கிடைத்த ஓர் அரசியல் ஆயுதம்’ என அம்பேத்கர் வர்ணித்தார். அரசியல் தளத்தில் இக்கோரிக்கை தற்போது மேலெழும்பி வருகிறது. தலித் தலைவர்களான தொல். திருமாவளவன், டாக்டர். கிருஷ்ணசாமி ஆகியோருக்கு இந்நேரத்தில் நன்றி கூற வேண்டும். (இவர்கள் மட்டும் தான் இக்கோரிக்கைகளை முன்னெடுத்த தலித் தலைவர்கள் என ஒற்றை வரியில் சொல்லிவிட முடியாது. அம்பேத்கர் நூற்றாண்டு தொடங்கிய காலத்தில் வெளியே தெரியாமல் இருந்த தலித் அமைப்புகள் மடை வெள்ளம் போல் இக்கோரிக்கையை முன்வைத்தே ஆர்ப்பரித்து வெளி