வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியனகள்பேசில் போவதே நோயாகி குறிப்பெனக் கடையுமாகில் கூடுமேல் தலையை ஆங்கே அறுப்பதே கருமம் கண்டாய் அரங்கமாநகருளானே! திருவரங்கப் பெரும் கோயிலில் அருள்கின்ற பெருமானே! உனது பெருமையை மற்றவர்கள் கூறுவதைப் பொறுக்காமல், அதை வெறுத்து இந்த மொட்டை அடித்த சமணர்களும், உனது அருளை அறியாத பாக்கியமில்லாத பௌத்தர்களும், உன்னைப் பற்றி பொறுக்கமுடியாத பல வார்த்தைகளைத் தொடந்து கூறுவாராகில் - ஒன்று, அந்தச் சொற்களைக் கேட்டு நான் உயிர் விடவேண்டும், அல்லது, உன்னை அவதூறு பேசுவார்களின் தலையை அப்போதே அறுத்துத் தள்ளுவதே தர்மம், இந்தப் பாட்டைப் பாடியவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். இந்தப்பாடல் நாலாயிர திவ்வியப்பிரபந்தத்தில் இன்றும் திருவரங்கக்கோயிலில் மங்களாசாஸனப் பாடலாகப் பாடப்படுகிறது. திருத்தொண்டரடிப்பொடியாழ்வார் சாதாரணமான பிராம்மண குலத்தில் பிறந்து, பூக்கள் கொய்து அரங்கனுக்கு மாலை செய்து, அவன் அருள் பெற்று, அவனையே ஆழ்ந்து ஆழ்ந்து தோய்ந்து பாடிய பாடல்களில் மேலே கண்டதும் ஒன்றாகும். பூக்களைக் கொய்யும் கையால் வாளெடுத்து சமண பௌத்தவாதிகளை அவர்கள் நாத்திகம்
Comments
Post a Comment