Posts

புத்தரும் புத்த மதத்தின் கோட்பாடுகளும் எழுத்தாளர்: பேரா. கே.ஏ.மணிக்குமார்

புத்தரும் புத்த மதத்தின் கோட்பாடுகளும் விவரங்கள் எழுத்தாளர்:  பேரா. கே.ஏ.மணிக்குமார் தாய்ப் பிரிவு:  புதுவிசை பிரிவு:  ஏப்ரல்06   வெளியிடப்பட்டது: 20 ஏப்ரல் 2006 புத்தர் ஞானம் பெற்ற நாள்முதல் தனது 80 ம் வயதில் சாகும்வரை சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகள் தனது கருத்துக்களைப் பரப்பவும், மதத்திற்கு ஆதரவாளர்களைத் திரட்டவும் கிழக்கு கங்கைச் சமவெளிப் பகுதிகளில் (குறைந்தது ஐநூறு புத்த பிக்குகளுடன்) சுற்றுப்பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். மகத நாட்டு மன்னன் பிம்பிசாரன் மற்றும் கோசலநாட்டு அரசன் பிரசன்னாஜித் புத்தமதத்தின் புரவலர்களாவர். எதிர்பாராத விதமாக வாரணாசியின் செல்வந்தரான யாசர் புத்தமதத்தில் இணைந்ததைத் தொடர்ந்து நகர்ப்புறங்களில் வாழ்ந்த செல்வந்தர்கள் பலர் புத்த மதத்தின்பால் ஈர்க்கப்பட்டனர், சிற்றரசர்களும் புத்தருக்கு பெரும் ஆதரவைத் தந்தனர். குசி நகரத்திற்கு புத்தர் வருகை புரிந்த போது அவரைச் சென்று வரவேற்காதவர்கள் ஐநூறு காசுகள் அபராதம் செலுத்த வேண்டும் என மல்லர் தலைவர் உத்திரவிட்டிருந்ததாக சமகாலச் சான்றுகள் தெரிவிக்கின்றன. புத்தமதத் துறவிகளின் எண்ண...

கல்வியிலிருந்து விலக்கப்படும் தலித்துகள் எழுத்தாளர்: கோ.ரகுபதி

கல்வியிலிருந்து விலக்கப்படும் தலித்துகள் விவரங்கள் எழுத்தாளர்:  கோ.ரகுபதி தாய்ப் பிரிவு:  புதுவிசை பிரிவு:  ஜூலை09   வெளியிடப்பட்டது: 15 செப்டம்பர் 2009 ''வெறும் பட்டப் படிப்பு அல்லது சட்டத்துறைப் படிப்பு படித்து முடிப்பது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு அதிகப் பயன் அளிக்காது. இந்துக்களுக்குக்கூட அது அதிக பலன் அளிக்கவில்லை. எது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு உதவுமெனில், விஞ்ஞானத்திலும் தொழில்நுட்பத்திலும் உயர்தர கல்வி கற்பதுதான்'' -அம்பேத்கர்.   ''.....கணிதம், கணிப்பொறி அறிவியல் போன்ற முதன்மை பாடப் பிரிவுகளில் தலித் மாணவர்கள் மிகமிக சொற்ப அளவில் பெயரளவிற்கே சேர்க்கப்படுகின்றனர். உயர் சாதி மாணவர்கள் ஒதுக்கித்தள்ளும் வரலாறு, விவசாயம் மற்றும் இன்னபிற கடைநிலை பாடப்பிரிவுகளையே தலித் மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சூழ்ச்சிகரமாய் அளிக்கிறது. மருத்துவம், பொறியியல் போன்ற உயர் கல்விகள் பயில்வதற்கு தலித் மாணவர்கள் தகுதி பெற்றவர்களாகிவிடக்கூடாது என்கிற மனுதர்ம மனோபாவத்துடன் பள்ளி நிர்வாகம் இத்தகைய சமூக அநீதியை சமீப காலங்களில் திட்டமிட்டு இழைத்து வருகிறது...

தலித்துகளின் எதார்த்தநிலை உருவாக்கமும் காட்சி ஊடகத்தின் அரசியலும் எழுத்தாளர்: கோ.ரகுபதி

தலித்துகளின் எதார்த்தநிலை உருவாக்கமும் காட்சி ஊடகத்தின் அரசியலும் விவரங்கள் எழுத்தாளர்:  கோ.ரகுபதி தாய்ப் பிரிவு:  புதுவிசை பிரிவு:  ஜனவரி10   வெளியிடப்பட்டது: 17 மார்ச் 2010 காட்சி ஊடகத்தின் வழியாக கதை மட்டுமல்ல கதையின் ஊடாக அரசியலும் கற்றுத்தரப்படுகிறது.  காட்சி ஊடகத்தில் கதை என்பது கதைப்பதற்காவோ கதை சொல்லுவதற்காகவோ அல்ல, கதை அரசியலுக்காகவே சொல்லப்படுகிறது.  இதன் அரசியலானது ஏற்க னவே இருந்துவருகின்ற சமூகத்தை தக்க வைத்துக் கொண்டு அதனை மேலும் வலுப்படுத்துவதாகும். காட்சி ஊடகம் விவாதங்களை உருவாக்குவதற்கான பொதுவெளியாக மாற்றப்பட வேண்டுமென்றால் மாற்று  ஊடகம் அவசியம்.  ஆவணப் படம், குறும்படம் இவையே காட்சி ஊடகத்தில் மாற்று ஊடகங்களாகும்.  மாற்று ஊடகம், சமூக மாற்றத்தின் மீதான பற்றுடைய சமூக ஆர்வலர்கள், இயக்கச் செயல்பாட்டாளர்கள் போன்றோரை இயக்குநர்களாக மாற்றியிருக்கிறது.  சமூக எதார்த்தங்களை, அவலங்களை ஆவணப் படங்களாகவும் குறும்படங்களாகவும் உருவாக்கியதன் மூலம் விவாதங் களுக்கு வித்திட்டிருக்கின்றனர் இவர்கள்.  இதற்குள்ளும் அரசியல் இருக்க...